Sunday 6 March 2016

Remember Me By Sophie Kinsella ....

Remember Me ? By Sophie Kinsella
Published : 2008 by bantam
Language : English
pages        : 444

          27 வயதாகும் பெண்ணின் கடைசி மூன்றாண்டு நினைவுகள் சிறு விபத்தின் மூலம் இழக்கும் பெண் எதிர்காலத்தை எப்படி சமாளிக்கிறாள் என்பதே கதையின் கரு. கதையின் ஓட்டம் லண்டன் மாநகரை மையப்படுத்தி நகருகிறது. தனது 24 ம் வயதில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியான லெக்சிக்கு மூன்று நண்பர்கள். அவர்களுடன் வார விடுமுறை தொடக்கத்தில் சந்திப்பை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கால் இடறி கீழே விழுகிறாள். அதன் பிறகு கண் விழிக்குமிடம் ஆஸ்பத்திரி அறையில்.
         நினைவுகள் காலிடறி விழுந்ததற்காய் இருக்கிறோம் இன்றைய தகப்பனாரின் ஈமசடங்கில் கலந்து கொள்ள முடியாதா என்ற ஏக்கத்தில் தவிக்கும் போது மருத்துவர் கூறும் செய்தி லெக்சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதன் பிறகு கதைக்களமும் மிக வேகமாக நகரத்தொடங்கிறது. முதலில் அதை மறுக்கும் லெக்சி அதன் பின் நடக்கும் சம்பவங்களின் கோர்வைகள் தான் மூன்றாண்டின் நினைவுகளை இழந்துவிட்டதை உறுதி படுத்துகிறது.
          தான் வேலை செய்த இடத்திலேயே மிக உயரிய பதவியை அடைகிறாள். அளவுக்கு மீறிய பணம், கணவன், அவர்கள் தத்தெடுக்கும் குழந்தை இவையனைத்தையும் கேள்வி படும் நேரம் அதை நம்ப மறுக்கும் அவளின் மனது புகைப்பட வீடியோ ஆதாரங்களின் உதவியுடன் நம்பத் தொடங்கும் அந்த நேரத்தில் புதிய காதலனாக கணவனின் நிறுவனத்தில் ஒப்பந்தமாகும் ஆர்கிடெக்கின் ரூபத்தில் வெடிக்கிறது.
           ஒன்றுக்குமே லாயக்கில்லாத நானெப்படி அதே நிறுவனத்தில் உயர்பதவி அடைந்தேன் , என்னுடைய பழைய காதலனை எப்படி கைவிட்டேன், தன் நண்பர்களை எப்படி வெறுத்தேன்  எனக் குழம்பித் தவிக்கும் நிலையில் தன் புதிய பதவிக்கும் மறதியின் மூலம் வரும் ஆபத்தையும் எதிர் கொள்ளத் துவங்குகிறாள்.
             எல்லா பக்கத்திலிருந்தும் சந்தேகங்கள் அவள் மனதை வாட்டி எடுக்கும் நிலையில் அவளின் முன் நிலை திரும்ப கணவனும் காதலனும் நண்பர்களும் உதவத் தொடங்குகிறார்கள். இதன் மூலம் தன் நினைவைத் திரும்ப பெறுகிறாளா ?  என்பதோடு தன் வாழ்வை கணவனோடா ?  காதலனோடா ?யாரைத் தேர்வு செய்து வாழ்வை துவங்குகிறாள் என்பதோடு கதை நிறைவு பெறுகிறது.
               கதை எந்த இடத்திலும் நிற்காமல் எளிதாய் பயணம் செய்கிறது. கதையில் அறிமுகப்படுத்தப்படும் குழந்தை அதற்கப்புறம் காணாமல் போகிறது. மிகச் சாதரணமாக அறிமுகமாகும் நாயகி எப்படி திடிரென மிகப்பெரிய கம்பெனியில் உயர்பதவியை அடைகிறாள் என்பதற்கான ஆதாரஙகள் மிகவும் தெளிவானதாக இல்லை. எளிமையான ஆங்கில நடை நாவலிற்கு பலம் சேர்க்கிறது. ஆங்கில மொழியில் படிக்கத்தொடங்க நினைக்கும் வாசகர்கள் இதை வாசிக்க முயற்சிக்கலாம்...

           

       

No comments:

Post a Comment