Sunday 6 March 2016

கிரிக்கெட் : வெற்றிக்கான புதிய ஒளி


போட்டிக்கான களத்தினுள் தோல்வியும் வெற்றியும் உட்புதைந்தே காணப்படுகின்றது. தேடுபவர்களின் கூட்டு முயற்சியைப் பொறுத்தும், காலச் சூழல்களின் தன்மைக்கேற்பவும், சிறிதளவு அதிர்ஷ்டமும் கலந்தே ஒரு வெற்றிக்கான கனியே உள்ளிலிருந்து தனதாக்கி கொள்வதற்கான சிற்ந்த வாய்ப்பாகவே அமையும். இது விளையாட்டிற்கான பதிவே. நேற்றைய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசை வென்ற விதம் பாராட்டுக்குரியதே. பங்களாதேஷ் அணியைப் பற்றி சொல்லும் போது இன்றைய காலச்சூழலில் எல்லாப் பெரிய அணிகளுக்கும் சவால் விடும் அணியாகவே வளர்ந்துள்ளது. எதிர்காலத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பிரமாண்டமாக உருவெடுக்கும் என்பதை அவர்களின் ஆட்டத்திறன் வளர்ந்த விதத்தின் மூலம் அறியலாம்

ஒரு போட்டியில் நம்பிக்கை என்பதே வெற்றிக்கான களத்தை அடைவதற்கான மிகச்சிறந்த வழி என்றாலும் அதீத நம்பிக்கையும் மிகத் தவறான வழியே. பங்களாதேசிடமிருந்த அதீத நம்பிக்கையும், நேற்றைய டாசில் தோல்வியும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பைப் பறிக்க செய்தது என்றே சொல்லலாம்.

ஆசிய கோப்பைக்கான தொடக்கத்தில் ஆடுகளம் புல்லால் நிறைந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்பதும் பத்து நாட்கள் முடிவில் ஆடுகளத்தின் புட்கள் மறைந்து பேட்டிங்கிற்கு சாதகமான சூழலை கொண்டு வந்ததும் நேற்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு போட்டியாக அமைந்தது.
சச்சின் டெண்டுல்கர் விளையாட்டிலிருந்து நீங்கியப் பிறகு அணியின் தலைமைக்கானப் போட்டி தொடங்கியது என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று. அதன் விளைவு ஆட்டத்தின் முடிவுகளை வெகுவாய பாதித்ததும்,டெஸ்ட் போட்டிகளிலிருந்து தன்னை அதிரடியாக விடுவித்துக் கொண்ட தோனி அதன் பிறகு ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி தலைமை ஏற்று ஆடி வருகிறார்.
தோனியின் தலைமையில் இன்னுமொரு வெற்றியுடன் ஆசிய கோப்பைகளை அதிக முறை வென்ற அணி என்ற புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். தோல்வியின் போது தோனியை விமர்சித்தவன் என்ற முறையிலும் இன்றைய வெற்றிகளைப் பார்க்கும் போதும், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் முதல் நான்கில் தோல்வியை தழுவியப் போதும் அவர்களைப் பாராட்டவே தோன்றுகிறது.. காரணம் அந்த தோல்விகளில் அவர்கள் போராடிய விதம் ஆறுதலே.
கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட தோனியே தன் சுயத்தை இழந்து காணப்பட்ட போட்டிகளும் உண்டு.. அதற்கான முழுக்காரணமும் குழுவிலிருந்த உட்பூசலே இதற்கு வீராட் கோலி மிக முக்கியமான இடத்திலிருந்தார் என்பது எனது தனிப்பட்ட வாதமே. மேலும் அவரது சொந்த வாழ்க்கையின் ஏற்பட்ட மாறுதல்கள் அவரது விளையாட்டில் மிகப் பெரிய மாறுதலையும் விளையாட்டிலிருந்த வேகம் குறைந்தும் காட்டியது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

கோலியின் தவறுகள் இப்போது திருத்தப்பட்டிருக்கின்றன சுயமறிந்து விளையாடத் தொடங்கியிருப்பதும் அவரது விளையாட்டில் ஊக்கம் கூடியிருப்பதும் போட்டியின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையே, அதே நேரம் தோனியும் தன் சுய கவுரவத்தை விட்டுக்கொடுத்து சில் முன்னணி விரர்களை (யுவராஜ், ஹர்பஜன்) அணியில் கொண்டு வந்ததும், எப்போதும் போலுள்ள பந்து வீச்சாளர்களை நம்பாமல் புதிய வீரர்களுக்கு (பூம்ரா, பாண்டிய ) கொடுத்த வாய்ப்பும் வீணாகமல் புதிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.


இந்த அணியின் கூட்டு முயற்சி தொடருமானால் வரப்போகும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கான பிரகசமான வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். இருப்பினும் நம் அணி நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது , நம்பிக்கையையும் , கூட்டு முயற்சியுமே.. அதை விடுத்த அதீத நம்பிக்கை ஏற்படுமானால் மீண்டுமொரு சரிவிற்கு பாதையை ஏற்படுத்தலாம்.


No comments:

Post a Comment