Tuesday 2 September 2014

பாரபட்சம்

நேற்று செவ்வாய்கிழமை
வாரச்சந்தை தினம்
சாலையோரம் முழுதும்
நடைபாதை வியாபாரிகள்
கடைவிரிக்க மக்கள் 
வெள்ளமும் ஈசல் போல
அடுக்கி வைக்கப்பட்ட
காய்களின் அழகும்
வியாபாரிகள் விற்பனைக்
கூவலும் வண்டிகளின்
சப்தமும் ஆர்பாரித்து
அல்லோகலப் பட
நாட்கள் நாலு முழுதும்
போக்குக் காட்டிய
மழை பெய்கிறேன் என்ற
தொனியில் பெய்யத் தொடங்க
விதைத்தவனுக்கு சந்தோசம்
கொடுக்கும் இம்மழை
அறுவடை செய்தப்
பொருளை விற்பவனுக்கு
என்ன சுகம் தரமுடியும்
என்ற இயற்கையின்
பாரபட்சத்தை எண்ணி
சங்கடத்தில்
மழையில் நனைந்துக்
கடக்கிறேன் எனக்குரிய
காய்கள் எனது வண்டியில்
பெட்டிக்குள் பத்திரமாக

No comments:

Post a Comment