நேற்று செவ்வாய்கிழமை
வாரச்சந்தை தினம்
சாலையோரம் முழுதும்
நடைபாதை வியாபாரிகள்
கடைவிரிக்க மக்கள்
வெள்ளமும் ஈசல் போல
அடுக்கி வைக்கப்பட்ட
காய்களின் அழகும்
வியாபாரிகள் விற்பனைக்
கூவலும் வண்டிகளின்
சப்தமும் ஆர்பாரித்து
அல்லோகலப் பட
நாட்கள் நாலு முழுதும்
போக்குக் காட்டிய
மழை பெய்கிறேன் என்ற
தொனியில் பெய்யத் தொடங்க
விதைத்தவனுக்கு சந்தோசம்
கொடுக்கும் இம்மழை
அறுவடை செய்தப்
பொருளை விற்பவனுக்கு
என்ன சுகம் தரமுடியும்
என்ற இயற்கையின்
பாரபட்சத்தை எண்ணி
சங்கடத்தில்
மழையில் நனைந்துக்
கடக்கிறேன் எனக்குரிய
காய்கள் எனது வண்டியில்
பெட்டிக்குள் பத்திரமாக
வாரச்சந்தை தினம்
சாலையோரம் முழுதும்
நடைபாதை வியாபாரிகள்
கடைவிரிக்க மக்கள்
வெள்ளமும் ஈசல் போல
அடுக்கி வைக்கப்பட்ட
காய்களின் அழகும்
வியாபாரிகள் விற்பனைக்
கூவலும் வண்டிகளின்
சப்தமும் ஆர்பாரித்து
அல்லோகலப் பட
நாட்கள் நாலு முழுதும்
போக்குக் காட்டிய
மழை பெய்கிறேன் என்ற
தொனியில் பெய்யத் தொடங்க
விதைத்தவனுக்கு சந்தோசம்
கொடுக்கும் இம்மழை
அறுவடை செய்தப்
பொருளை விற்பவனுக்கு
என்ன சுகம் தரமுடியும்
என்ற இயற்கையின்
பாரபட்சத்தை எண்ணி
சங்கடத்தில்
மழையில் நனைந்துக்
கடக்கிறேன் எனக்குரிய
காய்கள் எனது வண்டியில்
பெட்டிக்குள் பத்திரமாக
No comments:
Post a Comment