வயிற்றில்
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்.....
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்.....
காதல்
துன்பம்
ஏமாற்றம்
எதிர்பார்ப்பு
இழப்பு
இவையே
நவீன கவிதை
துன்பம்
ஏமாற்றம்
எதிர்பார்ப்பு
இழப்பு
இவையே
நவீன கவிதை
எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று.....
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று.....
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்....
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்....
பல்லாயிர ஜீவன்களையும்
விழுங்கிய பூமி
எப்போதும் போல் அழகாகவே...
மதுவும் ஆசையும்
விழுங்கிய பூமி
எப்போதும் போல் அழகாகவே...
மதுவும் ஆசையும்
உலகியல் வாழ்வில்
ஒரே மாதிரியான போதையே ..
நண்பகலில்
நான் மட்டும்
என் நிழல்
காலடியில்
சிரமப்பட்டு
கொண்டிருக்கிறது ..
நான் மட்டும்
என் நிழல்
காலடியில்
சிரமப்பட்டு
கொண்டிருக்கிறது ..
வாழ்வு முன்னோக்கி
மட்டுமே என் மாற்றத்திற்கு
நான் பொறுப்பல்ல ..
மட்டுமே என் மாற்றத்திற்கு
நான் பொறுப்பல்ல ..
பிணத்தை
உறிஞ்சி
வளர்ந்த மரம்
காற்றோ
இளந்தென்றலாய் ...
உறிஞ்சி
வளர்ந்த மரம்
காற்றோ
இளந்தென்றலாய் ...
நீண்ட இரவு
நீடித்த மழை
வீதிகளில் வெள்ளம்
குளிரில் சிறுவன்
வழி மறந்த கண்களில்
பசியின் துக்கம்
சிந்தனையில்
பிறப்பின் ஐயம்
சாலைகளில் வண்டிகள்
உண்டாக்கும் அலையில்
அவன் உடை
நனைந்து கொண்டிருக்கிறது ..
நீடித்த மழை
வீதிகளில் வெள்ளம்
குளிரில் சிறுவன்
வழி மறந்த கண்களில்
பசியின் துக்கம்
சிந்தனையில்
பிறப்பின் ஐயம்
சாலைகளில் வண்டிகள்
உண்டாக்கும் அலையில்
அவன் உடை
நனைந்து கொண்டிருக்கிறது ..
நின்ற நிலையில்
மாடும் ஆண் கன்றுகளும்
கடைசி பிரயாணத்தில் ..
மாடும் ஆண் கன்றுகளும்
கடைசி பிரயாணத்தில் ..
சிரிக்க
மறந்த
கலைஞனின்
கைவண்ணத்தில்
சிலைகள்
அழகாக
சிரிக்கிறது ..
மறந்த
கலைஞனின்
கைவண்ணத்தில்
சிலைகள்
அழகாக
சிரிக்கிறது ..
இளமையில்
உதித்த காமம்
நீர்த்துப்போகும்
உதிரமாய் ..
உதித்த காமம்
நீர்த்துப்போகும்
உதிரமாய் ..
கவிதையும்
விதையே
மனதில்
விதைத்தால்
வளரும்
மரமாய் ...
விதையே
மனதில்
விதைத்தால்
வளரும்
மரமாய் ...
நான்
நேசித்த
முகம்
யோசித்த
முகமாய் ..
நேசித்த
முகம்
யோசித்த
முகமாய் ..
கையில்
பிச்சைப் பாத்திரத்துடன்
திருமண அரங்கினுள்
நானும் ஒரு
மனிதனாய்...
பிச்சைப் பாத்திரத்துடன்
திருமண அரங்கினுள்
நானும் ஒரு
மனிதனாய்...
நிலவு தேய்வதுமில்லை
மறைவதுமில்லை
சூனியக்காரர்களாக
சூரியனும் பூமியும்...
மறைவதுமில்லை
சூனியக்காரர்களாக
சூரியனும் பூமியும்...
புரிந்து விட்டேன்
வெறுத்து விட்டேன்
மறந்து விட்டேன்
எல்லாம் இன்று
ஒரு நாள் மட்டும்
நான் குடிக்கவில்லை
இருந்தும் உளறுவது போல்...
வெறுத்து விட்டேன்
மறந்து விட்டேன்
எல்லாம் இன்று
ஒரு நாள் மட்டும்
நான் குடிக்கவில்லை
இருந்தும் உளறுவது போல்...
மறந்து போன விசயங்கள்
மறுத்து போனவை அல்ல
வெறுத்து போனவை..
மறுத்து போனவை அல்ல
வெறுத்து போனவை..
உதடுகள் சிரிக்க
உண்மை..
உண்மை..
உயிர் பிரிந்தவனின்
அடையாளம்
பிணமாய் மட்டும்..
அடையாளம்
பிணமாய் மட்டும்..
மதுவின் மயக்கத்தில்
தடுமாறும் கிழவனுக்கு
மூன்றாவது கால் மட்டும்
என்ன செய்ய முடியும்..
தடுமாறும் கிழவனுக்கு
மூன்றாவது கால் மட்டும்
என்ன செய்ய முடியும்..
புரிந்து கொள்ளமுடியாது
வரிகளில் புதைந்து போவது
கலைஞனின் உணர்வுகளே..
வரிகளில் புதைந்து போவது
கலைஞனின் உணர்வுகளே..
செண்டை மேளம் விண்ணை முட்ட
திருமண வரவேற்பில் பொடிபறக்க
மீந்தும் உணவுக்காக வெளியே
மனித அடையாளம் மட்டும்
வைத்திருக்கும் மனிதர்கள் ...
திருமண வரவேற்பில் பொடிபறக்க
மீந்தும் உணவுக்காக வெளியே
மனித அடையாளம் மட்டும்
வைத்திருக்கும் மனிதர்கள் ...
தொடரும் ......
No comments:
Post a Comment