Monday, 25 August 2014

வேண்டுதல்கள்

கடவுளே

என் நாளை இனிய நாளாக அமைத்துக் கொடு

என் வேலையை சுலபமாக்கி கொடு

என் குடும்பத்தை செல்வ செழிப்போடு காப்பாற்று

என் வியாபாரத்தை பெருக்கு

நல்ல ஏமாளியை காட்டு

எனக்கு நல்ல படிப்பு சக்தியை கொடு

இன்றைய தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தியை கொடு

ஒன்றுமே படிக்கவில்லை இருந்தும் தேர்ச்சி செய்ய வை

இன்று திருட நல்ல வீட்டைக் காட்டு

கொலை செய்து விட்டேன் போலீசிலிருந்து காப்பாற்று

என்னை அழகாக வை

என் முதலாளி என்னை திட்டாமல் இருக்க வை

அழகான பெண்ணைக் காட்டு காதலிக்க

மழையை கொடு

என் குழந்தையைக் காப்பாற்று

இன்று குடிப்பதற்கு வாங்கி கொடுக்க நல்ல நண்பனை காட்டு

கடன் கேட்காமல் இருக்க வை

என் பேப்பரை திருத்தும் வாத்திக்கு பாஸாக வைக்கும் மனதை கொடு

நல்ல வீடு வாங்க வேண்டும்

இது போன்ற வீடுகள் நிறைய வாங்க வேண்டும்

வாடகை கொடுப்பவர்களை ஒழங்காக கொடுக்க வை

வட்டிக்கு பணம் கொடுக்க நல்ல ஆளை காட்டு

கொடுத்த பணத்தை வசுலாக்கி கொடு

மனநிம்மதியை கொடு

சந்தோசத்தை மட்டும் கொடு

நோயிலிருந்து காப்பாற்று

ஒரு வேளை உணவுக்கு வழி செய் ஆண்டவா

நல்ல வேலைக்கு வழி கொடு

அழகான ஆண்குழந்தையை கொடு

பெண் குழந்தை வேண்டாம்

இந்த பெண்ணை கரை சேர்க்க வழி காட்டு

என் மகனுக்கு நல்ல புத்தியை கொடு

நல்ல நண்பர்களை காட்டு

எடுத்த காரியத்தில் வெற்றி கொடு

நினைத்தக் காரியம் நிறைவேற்று

விபத்திலிருந்து காப்பாற்று

இன்னும்

இன்னும்

இன்னும்

முறையீடுகள் எதற்காக ?

எல்லாம் நிறைவேறி விடுகிறதா ?

குறிப்பு வேண்டுதல்களில் இட ஒதுக்கீடு கிடையாது.....

No comments:

Post a Comment