கருத்தில்லாமல்
சிந்திக்காமல்
சிதறும் வார்த்தைகளை
அடுக்கி வைத்தான்
அந்த புதுக் கவிஞன்
சில இடங்களில்
அடித்தலும் கிறுக்கல்களும்
எழுதிய தாளில்
கவிதையின்
வளர்ச்சியும் கவர்ச்சியும்
குறைந்தது போல தோற்றம்
இடையிடையே விடுபட்ட சொற்கள்
இணைத்து வைத்திருக்கிறான்
எழுதியதை மாற்ற முடியாது போலும்
அடித்தலும் கிறுக்கலும் கவிதையின்
உள்ளமைப்போ
விளங்கவில்லை அதன் அமைப்பு
கவிஞனின் சிந்தனை சிதறுகிறது
உரிமையான அழைப்பு அது
வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன்
பசியின் கோரம் அவன் வயிற்றில் காண
பிடிச் சோறில்
பிடித்தவனாகி விட்டான் அந்த கவிஞன்
வீட்டினுள்ளே
தண்ணீர் பருகும் சப்தம் கேட்கிறது
வந்த கவிஞன் பேனாவை
மூடி வைத்து என்னையும்
கசக்கி தூற எறிந்து விட
விளக்கும் அணைந்து போனது......
சிந்திக்காமல்
சிதறும் வார்த்தைகளை
அடுக்கி வைத்தான்
அந்த புதுக் கவிஞன்
சில இடங்களில்
அடித்தலும் கிறுக்கல்களும்
எழுதிய தாளில்
கவிதையின்
வளர்ச்சியும் கவர்ச்சியும்
குறைந்தது போல தோற்றம்
இடையிடையே விடுபட்ட சொற்கள்
இணைத்து வைத்திருக்கிறான்
எழுதியதை மாற்ற முடியாது போலும்
அடித்தலும் கிறுக்கலும் கவிதையின்
உள்ளமைப்போ
விளங்கவில்லை அதன் அமைப்பு
கவிஞனின் சிந்தனை சிதறுகிறது
உரிமையான அழைப்பு அது
வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன்
பசியின் கோரம் அவன் வயிற்றில் காண
பிடிச் சோறில்
பிடித்தவனாகி விட்டான் அந்த கவிஞன்
வீட்டினுள்ளே
தண்ணீர் பருகும் சப்தம் கேட்கிறது
வந்த கவிஞன் பேனாவை
மூடி வைத்து என்னையும்
கசக்கி தூற எறிந்து விட
விளக்கும் அணைந்து போனது......
No comments:
Post a Comment