மாயவலை...
எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று...
மறந்துப்போன...
மறந்து போன விசயங்கள் என்று
ஒன்றில்லை அது நம் மூளையின்
மூலையில் உறங்கிக் கிடக்கிறது
குப்பையாய்- நிலை மாறும்
தருணங்களில் நீண்டு எழும்
நினைவுகளின் அலையில்
தூசு தட்டப்பட்டு நம்மை
ஊசிப்போலக் குத்தும் நாம்
மறந்துப் போன விசயங்கள்..
கவிதை இல்லை...
இதயம் பலஹீனமானவர்கள்
இந்த கவிதையை படிக்க
வேண்டாம் காரணம் இந்த
கவிதையில் இரக்கமில்லை
சமூகப் போராளிகள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இந்த கவிதையில்
போரட்டமில்லை
கவிதை படைப்பவர்கள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இதில் கவிதையே இல்லை
இறந்துவிட்டது...
மிகவும் மெதுவாக
உணவை உண்டு
கொண்டிருக்கிறேன்
காரணம் ருசியை
என் நாக்கு உணர்ந்து
கொண்டிருக்கிறது
இருந்தும் எனது
உணவு முடிந்து விட்டது
அதனுடன் எனது
ருசியும் இறந்துவிட்டது
புரிந்து கொண்டேன்...
புரிந்து கொண்டேன்
இருந்தும்
புரியாமல் தவிக்கிறேன்
புரிந்து கொண்டேன்
புரியாததையும்
தவிப்பதையும்
புரிந்து கொண்டேன்
புரியாமல் தவிப்பதை
தவிர்ப்பதற்காக
புரிந்து கொண்டேன்
இதை
படிக்கும் போது
நீங்கள் தவிப்பதை
புரிந்து கொண்டேன்
நீங்கள் தவிக்காமல்
தவிர்க்க
தவிர்க்க நீங்கள்
புரிந்து கொண்டால்
புரிந்து கொண்டதை
புரிய வைக்கவும்...
இளமைக்கால தழும்புகள்...
பருவத்திற்கு பூக்கும் மரம் போல
மனதில் கசப்பு பூக்களாய் பூக்கும்
எனது இளமைக்கால நினைவுகள்
அமைகின்ற வாழ்வில்
அடியோடு மாற்றினாலும்
தழும்பாகி போன ரணங்கள்
நிசப்தமில்லா இரவினில்
உறங்கும் உள்ளத்திலிருந்து
வௌிப்பட்டு கழுத்தை
நெறிக்கும் பிசாசாய்
எதற்காயும் விசனம் காட்டா
இயற்கையை போல் இருந்து விட
எத்தனித்தாலும் தனித்தே
விடப்பட்டசமயத்தில்
மழைக்கு சிணுங்கும்
தேரையை விழுங்கத் துடிக்கும்
பாம்பை போல் மெல்ல
மெல்ல ஊர்ந்து சமயம்
நோக்கி செலுத்தப்படும்
விசம் போல என்
இளமைக்கால தழும்புகள்....
கதை சொல்லப் போகிறேன்...]
கதை சொல்லப்
போகிறேன்
இந்தக் கதையில்
கதையில்லை
கவர்ச்சயில்லை
கதாபாத்திரங்களில்லை
நகைச்சுவை
ஆடல் பாடல் இல்லை
சமூக சீரழிவு பற்றி இல்லை
சண்டை இல்லை
இல்லாத இத்தனையும்
ஒரு கதையாக சொல்லி
கதை முடிக்க
ஒரு கதையாசிரியரை
தேடிக் கொண்டிருக்கிறது
இந்த கதை....
மீந்த உணவு...
குப்பையில் மீந்த உணவு
நக்கித் தின்னும் நாய்
நாயை விரட்டி பசி
போக்கும் சிறுவன்
தேநீர் கடை வாசலில்
தேர்தல் அறிக்கை
நாடு வல்லரசாக்கப்படும்...
கனவின் கொடூரங்கள்...
பல கொலைகளுக்கு
சாட்சியாகவும்
பயங்கரமான காட்டு
மிருகங்களுடனான
சண்டைகளும்
பாம்பின் துரத்தல்களும்
துடுப்பில்லா
படகில் நடுக்கடலில்
தத்தளிக்கும் தவிப்பிலும்
முற்றுப்பெறப் போவதில்லை
கனவின் கொடூரங்கள்...
நினைவுப்பாதை...
உனக்கும் எனக்கும்
ஆன உறவு இன்றோடு
முடிவதில்லை
முயற்சிக்காதே
நீயாக முடித்துக்
கொள்ள நடந்தவைகள்
நினைவின் களமாக
நிஜத்தின் நெடும்
பாதையில்
நெருடலற்ற
பயணத்தில்
நீயென்று
நீயும்
நானென்று
நானும்
நாம் என்ற
கனவோடு
நினைவுகளில் இல்லா
நினைவுப் பாதையில்....
விண்ணோடு உரையாடல்...
இரவாகிவிட்டது
இருந்தும்
நிலவை காணவில்லை
மனதில் குடிபுகுந்த
தனிமையோடு
லயமில்லாச் சிந்தனை
கொள்ள அந்நேரக்
காற்றோ அசுரத்
தனமாய் பெய்யத்
துடிக்கும் மழையை
தடுக்க ஏன் என்ற
கேள்வியோடு
விண்மீன் தெரியா
விண்ணோடு
என் உரையாடலை
தொடர்கிறேன்...
கவிதைகள் தொடரும்,