Tuesday, 2 September 2014

இரயில் நிலையத்தில்...

இரயில் நிலையத்தில் 
காத்து கொண்டிருக்க
காலதாமத அறிவிப்பு,
எதிர்பாராத வேளை
என்னருகில் வந்தமர்ந்தவரிடம்
வயோதிகம் ஆளுமை கொண்டிருந்தது 
வீடு கைவிட்டிருந்தது
பழுப்பேறிய வெள்ளை உடையிலும்
பார்வையின் குறை பாழடைந்த
கண்ணாடி கூட்டிலும் தெரிய
கையில் பைப்பொதி
எங்கே செல்ல என்று
அறிந்திருக்கவில்லை
அந்த சமயம் புகைவண்டி
ஒன்று வந்து நிற்கிறது
தள்ளாடி எழுந்த அந்த
முதியவரின் நடை
நத்தை பிரயாணத்தை
ஒத்திருக்க
அதைப் பார்த்த இதயங்கள்
ஒருமுறையாவது படபடத்திருக்க
வேண்டும் இருந்தும்
உதவிக்கு யாருமில்லை
முதியவரும்
நடையை விடாத நிலையில்
ஒரு பெட்டியை கடந்த போது
வண்டி அவருக்காக காத்திருக்க
மனமில்லாமல் வேகத்தைக் கூட்ட
ஒரு நிமிடம் யோசித்த
அந்த முதியவர் மீண்டும்
அதே நடையில் வந்து
என்னருகில் அமர
பேச்சுக் கொடுக்க தயக்கம்
காட்டிய மனதை குற்றம்
கொண்ட வேளையில்
நண்பனின் அழைப்பால்
அவரை விட்டு அகன்றேன்
வந்து சேர்ந்த போது
அந்த இடத்தில் அந்த
முதியவரைக் காணவில்லை
புறப்படத் தயரான புகைவண்டியின்
அறிவிப்பு என் கவனத்தை திருப்ப
படபடப்போடு என் நினைவும்
இயலாமையும்....

2 comments:

  1. கவிதையும் எழுதத்துவங்கிவட்டீர்களா அருமை. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete